உலகக் கோப்பை வெல்வதே இலக்கு!

ஹர்திக் பாண்ட்யா நம்பிக்கை

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் மும்பையில் இன்று தொடங்குகிறது. இதில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்பட உள்ளார்.

இந்திய அணியின் மூத்த ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் தொடர் குறித்து ஹர்திக் பாண்ட்யா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

உலகக் கோப்பையை வெல்வதுதான் இந்த புத்தாண்டில் தான் எடுத்திருக்கும் தீர்மானம் என்றும், இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரை வெல்வதற்கு இந்திய அணி முழு முயற்சி மேற்கொள்ளும் என்றும் கூறினார்.

இந்த ஆண்டை வெற்றியுடன் தொடங்க இந்திய அணி விரும்புவதாகக் கூறிய ஹர்திக் பாண்ட்யா அடுத்து வரும் உலகக் கோப்பை தொடரை வெல்ல வேண்டும் என்பதுதான் தற்போது தனக்கு உள்ள இலக்கு என்றும் கூறினார்.

Comments (0)
Add Comment