அனைவரும் முகக்கவசம் அணிவது அவசியம்!

 – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

தற்போது மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நோய்த் தொற்றை தடுக்கும் விதமாக தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சீனாவில் இருந்து மதுரை வந்த தாய்-மகள் உள்ளிட்ட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அவருடன் விமானத்தில் பயணித்த மேலும் 70 பேருக்கு பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 

வருகிற புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை ஏதும் இல்லை. மக்கள் சுய பாதுகாப்புடன் புத்தாண்டை கொண்டாட வேண்டும்.

பொது மக்கள் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த 70 பேருக்கும் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

மதுரையை அடுத்த விருதுநகரைச் சேர்ந்த தாய்-மகள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையொட்டி 2 பேரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

அவர்கள் தற்போது நல்ல உடல் நலத்துடன் உள்ளனர். புதியவகை கொரோனா தொற்று இருக்கிறதா என கண்காணிக்கப்படுகிறது.

கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் பொதுமக்கள் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும். பொருளாதாரம் பாதிக்கப்படும். எனவே பொதுமக்கள் சுய கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டியது அவசியமாகும்” எனக் கூறினார்.

Comments (0)
Add Comment