ஜன.9-ல் தொடங்குகிறது தமிழக சட்டசபை கூட்டத்தொடர்!

– சபாநாயகர் அப்பாவு

ஒவ்வொரு ஆண்டும் முதல் சட்டசபைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம்.

அதன்படி அடுத்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஜனவரி 9-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

இந்த கூட்டத் தொடரின் முதல் நாளில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துகிறார். இந்த தகவலை சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்தார். சட்டசபை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும் எனவும் சபாநாயகர் அப்பாவு அப்போது தெரிவித்தார்.

புதிதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு அடுத்த இருக்கை ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. 

Comments (0)
Add Comment