சர்வதேசப் போட்டியில் தங்கம் வென்ற மதுரை மாணவி!

இலங்கையில் சமீபத்தில் காமன்வெல்த் யூத் செஸ் போட்டிகள் நடந்தன. இதில் உலகில் உள்ள 17 நாடுகளில் இருந்தும் ஏராளமான வீரர்கள்,  வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கானப் பெண்கள் பிரிவில் மதுரை சொக்கலிங்கம் நகரை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி கனிஷ்கா கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்றார்.

மதுரைக்கு திரும்பிய அவரை அவரது பயிற்சியாளர் ராஜதர்ஷினி, நிர்வாகிகள் அழகு செந்தில்வேல்,  மணிமாறன் உள்ளிட்டோர் இனிப்புகள் வழங்கி பாராட்டினர்.

மாநில அளவிலும்,  தேசிய அளவிலும் சர்வதேச அளவில் பல சாதனைகள் படைத்துள்ள இவர், இந்தோனேசியாவில் நடந்த ஆசிய அளவிலான செஸ் போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கமும், ருமேனியாவில் நடந்த உலக அளவிலான போட்டியில் 6-வது இடத்தையும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த வெற்றி குறித்துப் பேசிய மாணவி கனிஷ்கா, “கடந்த 6 ஆண்டுகளாக செஸ் விளையாட்டில் ஈடுபட்டு வருகிறேன். தினமும் சுமார் 10 மணி நேரம் இதற்காக பயிற்சி எடுத்து வருகிறேன்” எனக் கூறினார்.

Comments (0)
Add Comment