ஆன்லைன் விளையாட்டைத் தடுக்க புதிய சட்டம்!

– ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

கர்நாடக மாநிலம் பெங்களூரு வந்த ஒன்றிய ரயில்வே மற்றும் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அனைத்து மாநிலங்களின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம். ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் பாதிப்புகள், தற்கொலைகள் குறித்து மாநில அமைச்சர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு நாடாளுமன்றம் மூலம் விரைவில் புதிய சட்டத்தை கொண்டு வர ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.  ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள தகவல் தொழில்நுட்ப மசோதா உலகிற்கே முன்மாதிரியாக இருக்கும்” என்றுக் கூறினார்.

Comments (0)
Add Comment