கூத்துப்பட்டறையில் அரங்கேறிய ‘பெர்னாதா இல்லம்’!

சென்னையில் வெளி ரங்கராஜன் நாடகக் குழுவினர் ஓர் ஆண்டுக்காலம் ஒத்திகை பார்த்த ‘பெர்னாதா இல்லம்’ நாடக நிகழ்வு அரங்கு நிறைந்த காட்சியாக கூத்துப் பட்டறையில் நடந்து முடிந்தது.

இதுபற்றிப் பதிவிட்டுள்ள நாடக இயக்குநர் வெளி ரெங்கராஜன், “ஒத்திகைகளுக்கும் நிகழ்வுக்கும் அரங்கை வழங்கிய கூத்துப்பட்டறைக்கும், பல அசெளகரியங்களை ஏற்று இணைந்து பயணித்த நடிகர்களுக்கும், பெரும் ஆதரவை வழங்கிய பார்வையாளர்களுக்கும் என் நன்றிகள்.

இடையில் நடிகர்களுடைய வாழ்வில் இனியதும், துயரம் மிகுந்ததுமான பல சம்பவங்கள் நடந்தேறின.

நாடகம் வெறும் நிகழ்வாக மட்டும் முடியாமல் வாழ்க்கை நிலைப்பாடு மற்றும் நிகழ்கலை அழகியல் குறித்த பல்வேறு உரையாடல்களை முன்னிறுத்திச் செல்கிறது” என்று எழுதியுள்ளார்.

Comments (0)
Add Comment