ரஃபேலால் இன்னும் வலுவடைந்த இந்திய ராணுவம்!

பிரான்ஸிடமிருந்து சுமார் ரூ.60,000 கோடியில் 36 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்ய 2016 ஆண்டு, செப்டம்பர் மாதம் ஒன்றிய அரசு ஒப்பந்தம் செய்தது.

அதன்படி முதல்கட்டமாக கடந்த 2020 ஜூலை மாதம் முதல் 5 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன. அந்த 5 ரஃபேல் போர் விமானங்களும் விமானப்படையுடன் சேர்க்கப்பட்டு நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டன.

அந்த வகையில் பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் தயாரித்த 35 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்துள்ள நிலையில், கடைசி மற்றும் 36 -வது ரஃபேல் விமானம் நேற்று இந்தியா வந்தடைந்தது.

பிரான்ஸில் இருந்து புறப்பட்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் எரிபொருள் நிரப்பிய பின்னர் நேற்று பிற்பகல் இந்தியா வந்தடைந்தது.

Comments (0)
Add Comment