சினிமாவுக்கும் எருமை மாட்டுக்கும் என்ன சம்மந்தம்!

நகைச்சுவை நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் அவர்கள் ஒரு பேட்டியில், அவர் சின்ன வயதில் கலைவாணரைச் சந்தித்து, சினிமா வாய்ப்புக் கேட்டபோது என்.எஸ்.கே அவரிடம் கேட்ட கேள்வி பற்றி கூறியிருந்தார்.

அவர்கள் இருவருக்கும் இடையே நடைபெற்ற உரையாடலாக எஸ்.எஸ்.சந்திரன் கூறியவை இதோ…
****
கலைவாணர்: சினிமாவைக் கண்டுபிடித்தது யார்?

எஸ்.எஸ்.சந்திரன்: தெரியாது.

கலைவாணர்: எமன் வாகனம் எது?

எஸ்.எஸ்.சந்திரன்: எருமை மாடு.

கலைவாணர்: பார்த்திருக்கிறாயா?

எஸ்.எஸ்.சந்திரன்: இல்லை.

கலைவாணர்: நீ கண்ணில் பார்க்கிற, நீ விரும்புகிற சினிமாவைப் பற்றி முதலில் தெரிந்துகொள்.

இந்தா செலவுக்குப் பணம் வைத்துக்கொள், கொஞ்சம் வளர்ந்து நாடக அனுபவத்தோடும் பெற்றோர் அனுமதியோடும் வா… வாய்ப்புத் தருகிறேன்.

– நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி முகநூல் பதிவு.

Comments (0)
Add Comment