ஜனவரி 6-ல் சென்னைப் புத்தகக் காட்சி!

சென்னையில் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி டிசம்பர் கடைசி அல்லது ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கும்.

இந்த ஆண்டு 46 வது புத்தகக் கண்காட்சி ஜனவரி 6 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறும் என தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நடந்த செயற்குழு கூட்டத்தில் சென்னை புத்தகக் காட்சி நடைபெறும் நாட்கள் முடிவு செய்யப்பட்டுள்ளது.

46 வது புத்தகக் காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். அதற்காக அவரிடம் அனுமதி கேட்டு பப்பாசி முறைப்படி கடிதம் கொடுத்துள்ளது.

சென்னையில் ஒரு திருவிழா போல நடைபெறும் புத்தக் காட்சிக்கான தேதி அறிவிக்கப்பட்டதால், பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் வாசகர்கள் உற்சாகம் அடைந்துள்ளார்கள்.

Comments (0)
Add Comment