உலகை மாற்றும் சக்தி வாய்ந்த ஆயுதம் கல்வி!

– நெல்சன் மண்டேலா 

தைரியம் என்பது பயம் இல்லாமல் இருப்பது அல்ல; பயமே இல்லாதவர் தைரியமான மனிதர் அல்ல, ஆனால் பயத்தை வென்றவரே தைரியமான மனிதர்.

பதிலுக்கு எதையும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவுவதற்காக ஒருவர் தனது நேரத்தையும் சக்தியையும் கொடுப்பதை விட சிறந்த பரிசு எதுவும் இருக்க முடியாது.

இந்த உலகில் வாழும் அனைவருக்குமான ஒரு சிறந்த உலகை உருவாக்குவது உங்கள் கைகளில் உள்ளது.

செய்து முடிக்கும் வரை மட்டுமே அது சாத்தியமற்றதாகத் தோன்றும்.

இந்த உலகை மாற்றுவதற்கு உங்களால் பயன்படுத்தக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி.

அடிமைத்தனம் மற்றும் நிறவெறி போலவே, வறுமையும் இயற்கையானது அல்ல. இது மனிதனால் உருவாக்கப்பட்டதாகும், மேலும் மனிதர்களின் செயல்கள் மூலம் இதை வெல்லவும் மேலும் இல்லாமல் ஒழிக்கப்படவும் முடியும்.

தாங்கள் செய்வதில் அர்ப்பணிப்புடனும் ஆர்வத்துடனும் இருந்தால், சூழ்நிலைகளைக் கடந்து வந்து அனைவராலும் வெற்றியடைய முடியும்.

நீங்கள் உங்கள் கொள்கைகளை சமரசம் செய்யக்கூடாது, ஆனாலும் உங்கள் எதிராளியை அவமானப்படுத்தக்கூடாது. அவமானப்படுத்தப்பட்டவரை விட ஆபத்தானவர்கள் வேறு யாரும் இல்லை.

ஒரு சமூகத்தின் உண்மையான குணம் அது குழந்தைகளை எவ்வாறு நடத்துகிறது என்பதில் வெளிப்படுகிறது.

நீங்கள் ஒரு மனிதனுடன் அவரால் புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் பேசினால், அது அவருடைய தலைக்குச் செல்லும். நீங்கள் அவருடன் அவருடைய மொழியில் பேசினால், அது அவருடைய இதயத்திற்குச் செல்லும்.

பின்னால் இருந்து வழிநடத்துங்கள் – மற்றவர்கள் தாங்கள் முன்னால் இருப்பதாக நம்பட்டும்.

மிகவும் கடினமான விஷயங்களில் ஒன்று சமுதாயத்தை மாற்றுவது அல்ல – உங்களை நீங்களே மாற்றிக் கொள்வது.

நம் உலகில் வறுமை, அநீதி மற்றும் அதிகப்படியான சமத்துவமின்மை நீடிக்கும் வரை, நாம் எவரும் உண்மையிலேயே ஓய்வெடுக்க முடியாது.

குடிமக்கள் கல்வியறிவு பெறாதவரை, எந்தவொரு நாடும் உண்மையில் அபிவிருத்தியடைய முடியாது.

வரலாற்றைப் படைப்பது மன்னர்களும் தளபதிகளும் அல்ல, மாறாக வெகுஜன மக்களே.

மன்னிப்பு இல்லாமல் இங்கே எதிர்காலம் இல்லை.

உடற்பயிற்சி என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன அமைதிக்கும் முக்கியமானதாகும்.

நம்பிக்கை ஒரு சக்திவாய்ந்த ஆயுதம், அதை உங்களிடமிருந்து பறிக்கக்கூடிய சக்தி இந்தப் பூமியில் யாரிடமும் இல்லை.

கடந்த கால விடயங்களை குறை கூறுவதால், அவை சிறந்ததாக மாறிவிடாது.

பெரும் கோபமும் வன்முறையும் ஒருபோதும் ஒரு தேசத்தை உருவாக்காது.

மக்களால் தங்கள் வயிற்றுக்கு உணவிட முடியாவிட்டால், அவர்களுக்கு ஒரு இருப்பிடம் இல்லாவிட்டால், அறியாமை மற்றும் நோய்கள் அவர்களைத் தொடர்ந்து கொண்டே இருந்தால், சுதந்திரம் என்பது அர்த்தமற்றது.

நீங்கள் ஒரு பேச்சுவார்த்தை நடத்துகிறீர்களானால், நீங்கள் அதை நல்லிணக்க மனப்பான்மையுடன் செய்ய வேண்டும், இறுதி எச்சரிக்கை விடுக்கும் கண்ணோட்டத்தில் அல்ல.

எனது வெற்றிகளின் மூலம் என்னை மதிப்பிடாதீர்கள், எத்தனை முறை நான் கீழே விழுந்து மீண்டும் எழுந்தேன் என்பதன் மூலம் மதிப்பிடுங்கள்.

உயர்ந்த சிந்தனை உயர்ந்த மனதிலிருந்தே வருகின்றது.

சூழ்நிலைகள் அனுமதிக்கும்போது அஹிம்சை ஒரு நல்ல கொள்கை.

ஒரு நல்ல தலைமை மற்றும் ஒரு நல்ல இதயம் ஆகியவை எப்போதுமே ஒரு வல்லமைமிக்க இணை.

Comments (0)
Add Comment