கோவில்களில் செல்போன் பயன்பாட்டிற்குத் தடை!

– உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

தமிழக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக கோயில் அர்ச்சகர் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதிகள்,

“கோவிலின் புனிதம் மற்றும் தூய்மையைக் காக்கும் விதமாக செல்போன் தடையை அனைத்து கோவில்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த ஏற்கனவே தடை உள்ளது.

செல்போன்களுடன் செல்லும் பக்தர்கள் டிக்கெட் வாங்கிக் கொண்டு அதற்கான லாக்கர்களில் செல்போனை வைத்துவிட வேண்டும்.

சாமி கும்பிட்டு திரும்பி வரும்போது டிக்கெட்டை கொடுத்து விட்டு செல்போன்களை திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்நிலையில், அனைத்து கோவில்களிலும் செல்போன்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளதால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடைமுறை இனி அனைத்துக் கோவில்களிலும் பின்பற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Comments (0)
Add Comment