சொத்துப் பிரச்னையில் கமலும் ரஜினியும் செய்த சமரச முயற்சி!

நடிகர் திலகத்தின் குடும்ப சொத்துப் பிரச்னை பெரிதாகி நீதிமன்றம் படிகளில் ஏறி இறங்கியிருக்கிறது.

தங்களுக்கான பங்குகளை சகோதர்கள் ராம்குமார், பிரபு இருவரும் விற்று விட்டார்கள் என்று சிவாஜியின் மகள்கள் இருவரும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள்.

பெரிய குடும்பத்துப் பிரச்னையில் ரஜினியும் கமலும் தேவைப்பட்டால் தலையிடுவதாக நடிகர் பிரபுவிடம் தெரிவித்திருந்தார்கள்.

அத்துடன் பிரச்னையை உங்களுக்குள் பேசி முடித்துக்கொள்ளுங்கள் என்றும் அட்வைஸ் செய்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து சகோதரிகளுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது.

சிவாஜியின் குடும்பத்தின் மீது மதிப்பும் அக்கறையும் கொண்டுள்ள கமல்ஹாசன், கடைசிக் கட்டமாக பிரச்னைகளைக் கேட்கப் போகிறார்.

இருதரப்பும் அதற்கு சம்மதம் தெரிவித்த பிறகே இருவரும் தலையிட முன்வந்தார்களாம். 

அடுத்த வாரத்திற்கு சொத்துப் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

Comments (0)
Add Comment