மகளிருக்கு கலைவாணர் கொடுத்த மதிப்பு!

அருமை நிழல்:

பெண்மைக்கு மதிப்பளிக்கச் சொல்லி பாரதி கவிதையில் முழங்கிய மாதிரி திரைப்படத்தில் முழங்கியவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.

மதுரம் அம்மையாருக்கு ஜோடியாகப் பல படங்களில் நடித்தபோதும் பெண்மையை உயர்த்துகிற விதமாகவே காட்சிகளை அவர் அமைத்தார்.

பெண்களுக்கான சமூகப் பேரவையை அப்போதே உருவாக்கியிருந்தார். அவரும், மதுரம் அம்மையாரும் ஓய்வாகப் பிரம்பு நாற்காலிகளில் உட்கார்ந்திருக்கும் காட்சி.

Comments (0)
Add Comment