விவசாயத்த பொறுப்பா கவனிச்சு செய்தோமா?

நினைவில் நிற்கும் வரிகள்:

பொண்ணு வெளையிற பூமியடா
விவசாயத்த பொறுப்பா கவனிச்சு
செய்தோமடா.
உண்மையா உழைக்கிற நமக்கு
எல்லா நன்மைகளும் நாடி வந்து
கூடுதடா..

மணப்பாறை மாடு கட்டி
மாயாவரம் ஏரு பூட்டி
வயக்காட்ட உழுது போடு
சின்னக்கண்ணு
பசுந்தழைய போட்டு பாடு படு
செல்லக்கண்ணு

(மணப்பாறை…)

ஆத்தூரு கிச்சடி சம்பா
பாத்து வாங்கி விதை விதைச்சி
நாத்த பறிச்சி நட்டுப்போடு
சின்னக்கண்ணு
தண்ணிய ஏத்தம் புடிச்சு
எறைச்சி போடு செல்லக்கண்ணு

கருதை நல்லா வெளைய வச்சி
மருத ஜில்லா ஆளை வச்சி.
அறுத்து போடு களத்து மேட்டுல
சின்னக்கண்ணு
நல்லா அடிச்சி தூத்தி
அளந்து போடு செல்லக்கண்ணு

பொதிய ஏத்தி வண்டியிலே
பொள்ளாச்சி சந்தையிலே
விருதுநகர் வியாபாரிக்கு
சின்னக்கண்ணு
நீயும் வித்து போட்டு பணத்தை எண்ணு
செல்லக்கண்ணு

சேத்த பணத்த சிக்கனமா
செலவு பண்ண பக்குவமா
உங்க அம்மா கையில கொடுத்து போடு
சின்னக்கண்ணு
அவங்க ஆற நூறு ஆக்குவாங்க
செல்லக்கண்ணு

(மணப்பாறை…)

– 1957-ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த ‘மக்களை பெற்ற மகராசி’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் மருதகாசி. குரல் – டி.எம்.சௌந்தரராஜன். இசை – கே.வி.மகாதேவன்.

Comments (0)
Add Comment