ஆன்லைன் ரம்மி: அரசிடம் விளக்கம் கேட்ட ஆளுநா்!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உட்பட பணம் வைத்து விளையாடப்படும் விளையாட்டுகளைத் தடை செய்து பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஆளுநரின் ஒப்புதலுக்காக இந்த சட்ட மசோதா அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அதில் சில விளக்கங்களை அவா் கோரியுள்ளாா்.

இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதில், “ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடா்பாக, விளக்கம் கோரி ஆளுநா் கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து முறையான கடிதம் கிடைக்கப் பெற்றவுடன், அதற்கு அரசுத் தரப்பில் உரிய பதில் அளிக்கப்படும்” என்றும்  அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment