உலகக் கோப்பை கால்பந்து; ரொனால்டோ உலக சாதனை!

உலகக்கோப்பை கால்பந்து 2022 தொடரின் 15 வது போட்டியில் குரூப் H பிரிவில் போர்ச்சுகல் அணியும், கானா அணியும் மோதின.

இந்த ஆட்டத்தில் கானா அணியை 3-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி வீழ்த்தியது.

இந்த போட்டியில் பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்ததன் மூலம் 5 உலகக் கோப்பை தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார் நட்சத்திர வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ.

குரூப் H பிரிவில் நடைபெற்ற போட்டியில் ரொனால்டோவின் தலைமையிலனான போர்ச்சுகல் அணி கானா அணியுடன் மோதியது.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

ஆட்டத்தின் 2-வது பாதியில் 65வது நிமிடத்தின் போது ரொனால்டோவிற்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

இந்த பெனால்டி வாய்ப்பை கிரிஸ்டியானோ ரொனால்டோ கோலாக மாற்றினார். இதன்மூலம் 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் முன்னிலை பெற்றது.

பின்னர் 73-வது நிமிடத்தில் கானா அணி கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என்று சமன் செய்தது.

Comments (0)
Add Comment