சூடு பிடிக்கும் குட்கா ஊழல் வழக்கு!

கடந்த 2016- ஆம் ஆண்டு செங்குன்றம் அருகே அமைந்திருந்த கிடங்கு ஒன்றில் வருமான வரித்துறையினா் நடத்திய சோதனையில் ரகசிய டைரி ஒன்று சிக்கியது.

அதில், தமிழகத்தில் குட்கா விற்பனைக்கு இருந்த தடையை மீறி குட்கா விற்பனை செய்ய அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து முன்னாள் அமைச்சா்கள் சி.விஜயபாஸ்கா், ரமணா, முன்னாள் டிஜிபிக்கள் டி.கே ராஜேந்திரன், ஜார்ஜ், எஸ்.பி விமலா, கலால்துறை மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனா்.

அந்த ஆவணங்களின் அடிப்படையில் இவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. குறிப்பாக, டிஜிபி ராஜேந்திரன் பதவியிலிருந்த போது அவரிடம் சிபிஐ வீட்டில் சென்று விசாரணை நடத்தியது.

இதனிடையே அண்மையில் தலைமைச் செயலாளா் இறையன்புவுக்கு சிபிஐ எழுதிய கடிதத்தில், குட்கா முறைகேடு வழக்கு சமுதாயத்தில் சீா்கேட்டை விளைவிக்கும் வகையில் உள்ளதால், அதன் முக்கியத்துவத்தை கருதி தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்ததாக கூறப்பட்டது.

மேலும், மாநில அரசிடம் அனுமதி பெற்று இதில் தொடர்புடையோர் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரப்பட்டிருந்தது.

இதனைத் தொடா்ந்து, அதிமுக ஆட்சியில் இருந்தபோது தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை உற்பத்தி செய்யவும் விற்பனை செய்யவும் அனுமதி கொடுத்த விவகாரத்தில்

முன்னாள் அமைச்சா்கள் விஜயபாஸ்கா், ரமணா உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய புலனாய்வுத்துறைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது.  

இந்நிலையில், குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சா்கள் விஜயபாஸ்கா், ரமணா உள்பட 21 போ் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

சென்னை முன்னாள் காவல்துறை ஆணையா்கள் டி.கே.ராஜேந்திரன், ஜாா்ஜ் மீதும் கூடுதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment