பிரியா மரணம் தொடர்பான மருத்துவ அறிக்கை தாக்கல்!

சென்னை அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் காலை இழந்த கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி அண்மையில் உயிரிழந்தார்.

அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது மருத்துவக் குழுவினர் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அதில் சிகிச்சையின் போது மருத்துவர்கள் அஜாக்கிரதையாக இருந்ததும், மாணவிக்கு தவறான சிகிச்சை அளித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அவர்கள்மீது துறை ரீதியிலான விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், அவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மாணவிக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை குறித்த விவரங்கள் காவல்துறைக்கு கிடைக்காததால் அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், பிரியா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை மருத்துவ கல்வி இயக்குனரகம், காவல்துறையிடம் ஒப்படைத்தது.

விசாரணை அறிக்கையைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.

Comments (0)
Add Comment