கோபப்படு, வெளிக்காட்டிக் கொள்ளாதே!

நவம்பர் – 16 : உலகப் பொறுமை தினம்.

கோபப்படு
பயங்கரமாக,
வெளிக்காட்டிக்
கொள்ளாதே,

வெளியேறிய
நீராவியைவிட
அடங்கிய நீராவிதான்
ஆயிரம் டன் ரயிலை
நகர்த்துகிறது.

கோபப்படு…
ஆனால்
அதற்கு முன்
மும்மடங்கு
பொறுமையாய் இரு.
பூமிகூட
பொறுத்திருந்துதான்
பூகம்பத்தை
வெளிப்படுத்துகிறது.

-மா.சுந்நரமூர்த்தி, செய்யாறு

Comments (0)
Add Comment