வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது!

– இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு வங்க கடல், இந்திய பெருங்கடல் பகுதியில் 4.5 கி.மீ உயரத்திற்கு வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதனால், வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில், வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும் இந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி நவம்பர் 11-ம் தேதிக்குள் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து வரும்” என்றுக் கூறப்பட்டுள்ளது. 

Comments (0)
Add Comment