தொடர் தோல்வியால் கேப்டன் பதவியைத் துறந்த நபி!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது.

இதுவரை உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.

2 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டதால் அந்த அணி புள்ளி பட்டியலில் 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

இதனால் உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து முகமது நபி விலகியுள்ளார்.

இதுதொடர்பாக முகமது நபி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “ஆப்கானிஸ்தான் அணியின் டி20 உலக கோப்பைப் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளதோடு, போட்டிகளின் முடிவுகளால் ரசிகர்களை போலவே நாங்களும் விரக்தி அடைந்துள்ளோம்.

கடந்த சில சுற்றுப்பயணங்களில் அணி நிர்வாகம், தேர்வுக் குழு மற்றும் எனது முடிவுகளில் வேறுபாடு இருந்துள்ளது.

அதோடு, இந்த மாற்றங்கள் அணியின் சமநிலையில் தாக்கங்களை ஏற்படுத்தியது. இதனால் கேப்டன் பதவியை ராஜினாமா செய்கிறேன்.

அணி நிர்வாகம் விரும்பினால் ஒரு வீரராக தொடர்ந்து விளையாட தயாராக இருக்கிறேன்” என  பதிவிட்டுள்ளார்.

Comments (0)
Add Comment