‘ஜெய்பீம்’ இயக்குநரின் அடுத்த படைப்பு!

ஆஸ்கர் விருது வரை சென்ற ஜெய்பீம் டைரக்டர் ஞானவேல் அடுத்த படத்தை இயக்குவதற்கு முழுமையாக தயாராகிவிட்டார்.

இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படமும் உண்மைக் கதையை பின்னணியாக வைத்தே திரைக்கதை எழுதப்பட்டுள்ளதாம்.

இதற்கான அடிப்படை பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.

முக்கிய வேடத்தில் வரும் சூர்யாவுடன் நடிக்கும் மற்ற நடிகர்கள் பற்றிய தகவல் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

Comments (0)
Add Comment