போல் வால்ட் விளையாட்டில் சாதித்த தஞ்சாவூர் பெண்!

போல் வால்ட் விளையாட்டில், தேசிய சாதனை படைத்திட்ட தஞ்சைப் பெண் ரோசி மீனா, உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

சமீபத்தில் குஜராத்தில் நடந்துமுடிந்த தேசிய விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்ட தஞ்சைப்பெண் ரோசி மீனா பால்ராஜ், போல்வால்ட் விளையாட்டு போட்டியில் 8 வருடங்களாக இருந்த சாதனையை முறியடித்து, புதிய சாதனை படைத்துள்ளார்.

சிறுவயது முதலே விளையாட்டில் ஆர்வமுள்ள ரோசி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் செண்பகமூர்த்தியின் உதவியால் இதுவரையிலும் பல சாதனைகள் படைத்துள்ளார்.

தேசிய அளவில் புதிய சாதனை படைத்ததை அடுத்து உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Comments (0)
Add Comment