கவனிக்க வைத்த ‘காந்தாரா’ நடிகர்!

‘காந்தாரா’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் தெரிந்த நடிகராகவும், இயக்குநராகவும் மாறிவிட்டார் ரிஷப் ஷெட்டி.

கன்னடத்தில் பல படங்களில் நடித்தும், சில படங்களை இயக்கியும் இருக்கிற இவர், எம்.பி.ஏ படித்திருக்கிறார். 39 வயதான ரிஷப் ஷெட்டி ஃபிலிம் டைரக்ஷ்னில் டிப்ளமோ வாங்கி இருக்கிறார்.

2012-ல் சிறிய வேடத்தில் ‘துக்ளக்’ படத்தில் நடித்து, நடிகராக அறிமுகம் ஆனார். ‘யக்ஷ்சகானா’ என்ற கர்நாடக Traditional folk dance-ல் நன்கு பயிற்சி பெற்றவர். இவர் நடித்து 2019-ல் வெளிவந்த ‘பெல் பாட்டம்’ படம் சூப்பர் ஹிட்.

2016-லிருந்து படங்களை இயக்கி வரும் ரிஷப் ஷெட்டியின் உண்மை பெயர் பிரஷாந்த் ஷெட்டி. இவருடைய தந்தை பாஸ்கர் ஷெட்டி புகழ் பெற்ற ஜோசியர். அவர்தான் ரிஷப் ஷெட்டி என்று பெயர் மாற்றம் செய்தார். அதிலிருந்து அதிர்ஷ்டம் அடித்தது ரிஷப் ஷெட்டிக்கு.

இவருக்கு திருமணம் ஆகி 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இவருக்கு பிடித்த நடிகை திவ்யா ஸ்பந்தனாவாம். நம்ம தமிழ்ப் படங்களில் நடித்த ‘குத்து’ ரம்யாதான். இவருடைய மனைவி பிரகதிக்கு முதல் பரிசாக கம்மல் அளித்திருக்கிறார்.

Comments (0)
Add Comment