தமிழகத்தில் புதிதாக வைரஸ் பரவ என்ன காரணம்?

தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

கோவை அரசு மருத்துவமனையில், மருந்து கடை பொறுப்பாளராக பணியாற்றி வந்த முத்துமாலை ராணி என்பவர் மீது, அனுமதிக்கப்பட்ட அளவை மீறி அதிகப்படியான மருந்துகளை வாங்கியதாகவும், அது காலாவதியானதால் அரசு கருவூலத்திற்கு நிதி இழப்பு ஏற்பட்டதாகவும் அவா் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், கொரோனாவைத் தொடர்ந்து குரங்கு காய்ச்சல், இன்ஃப்ளூயன்ஸா உள்ளிட்ட பல வைரஸ் நோய்கள் தமிழகம் முழுவதும் தொடா்ந்து பரவி வருவதாகவும்,

இதுபோன்று புதிது புதிதாக வைரஸ் நோய்கள் பரவுவதற்கான காரணத்தை மருத்துவ ஆராய்ச்சியாளா்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய நீதிபதிகள், “இதுபோன்ற நோய்கள் திட்டமிட்டு பரப்பப்படுவதாக மக்கள் மத்தியில் சந்தேகம் உள்ளது. நீதிபதி, மருந்து நிறுவனங்கள் இச்செயலில் ஈடுபடுகின்றனவா என்பதை விசாரிக்க வேண்டும்” என அறிவுறுத்தினார்.

மேலும் மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகளை அரசு கண்காணிக்கிறதா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, புதிய வைரஸ் நோய்கள் பரவுவதற்கான காரணங்களை தெரிவிக்க தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Comments (0)
Add Comment