இந்திய எல்லைக்குள் பறந்த 191 பாகிஸ்தான் டிரோன்கள்!

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழையும் ஆளில்லா விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், உள்நாட்டு பாதுகாப்புகள் அதிகாரிகளிடையே கவலையை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தானிலிருந்து கடந்த 9 மாதங்களில் மட்டும் 191 டிரோன்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்திருப்பதாகவும், அதில் 7 சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், இது உள்நாட்டு பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 171 டிரோன்கள் பஞ்சாப் செக்டார் பகுதி வழியாகவும், 20 டிரோன்கள் ஜம்மு செக்டார் பகுதி வழியாகவும் பாகிஸ்தானிலிருந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டிரோன்கள் மூலம், ஆயுதங்கள், வெடிபொருள்கள், ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள்களை பாகிஸ்தானிலிருக்கும் பயங்கரவாத குழுக்கள், இந்திய எல்லைக்குள் ஊடுருவியிருக்கும் பயங்கரவாதிகளுக்கு அனுப்பி வைப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகம் ஒன்றிய அரசு கூறியுள்ளது.

Comments (0)
Add Comment