கிராமத்துப் பின்னணியில் உருவாகும் மிஸ்டரி திரில்லர் படம்!

இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் ‘எமகாதகி’. படத்தின் படப்பிடிப்பு முடிந்தநிலையில் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்துவருகிறது.

நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

திரைத்துறையில் தொழில்நுட்பக் கலைஞர்களாக, கலையை நேசிக்கும் உண்மையான காதலர்களாக வலம்வரும் நண்பர்கள் நடிகர் வெங்கட் ராகுல் ஒளிப்பதிவாளர் சுஜித்சாரங், எடிட்டர் ஶ்ரீஜித்சாரங் ஆகியோர் இணைந்து படத்தை தயாரித்துள்ளனர்.

திரைத்துறையில் பணியாற்றிவரும் இவர்களை கலையும் சினிமா மீதான காதலும் நண்பர்களாக இணைத்துள்ளது.

புதுமுகங்களால் உருவாகும் இப்படம் எந்தவித சமரசமுமின்றி முழுக்க முழுக்க கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகனை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்லும் தரமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

ஒரு பெண் முதன்மை நாயகியாக நடிக்கும் படத்தில் ரூபா கொடுவயூர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். தஞ்சாவூரைச் சுற்றிய கிராமங்களில் முழு படப்பிடிப்பும் நடத்தப்பட்டுள்ளது.

கிராமத்துப் பின்னணியில் நடக்கும், சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி திரில்லராக உருவாகியுள்ளது. படத்தின் டிரெய்லர், இசை மற்றும் திரையரங்க வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்படும்.

Comments (0)
Add Comment