இந்தியாவில் 5ஜி சேவை தொடக்கம்!

– டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

இந்திய மொபைல் காங்கிரசின் 4 நாள் மாநாடு, டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

‘இந்தியா மொபைல் காங்கிரஸ்-2022’ மாநாட்டின் தொடக்க விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி 5ஜி இணையத்தை தொடங்கி வைத்தார். பின்னர் 5ஜி தொடர்பான பிற தொழில்நுட்பங்களையும் பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.

5ஜி அடிப்படையிலான டிரோன்கள், கழிவுநீர் கண்காணிப்பு அமைப்புகள், சுகாதாரம் தொடர்பான தொழில்நுட்பம் மற்றும் இணைய பாதுகாப்பிற்கான செயற்கை நுண்ணறிவு சார்ந்த தளங்கள் மூலம் விவசாயத்தின் தொழில்நுட்பத்தையும் அவர் மேற்பார்வையிட்டார்.

முதலில், குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவை அமலுக்கு வருகிறது. 2 ஆண்டுகளுக்குள் படிப்படியாக நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்று தெரிகிறது.

4ஜி சேவையை விட பல மடங்கு வேகத்தில் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய 5ஜி சேவை உதவும்.

Comments (0)
Add Comment