இயக்குநர் செல்வராகவனுக்கு தாணு பாராட்டு!

நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி S தாணு வழங்கும் வீ கிரியேஷன்ஸ் தயாரிப்பில் “நானே வருவேன்” திரைப்படம் உலகமெங்கும் வியாழக்கிழமை வெளிவந்தது. ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட பொன்னியின் செல்வன் வெளியான நாளுக்கு, ஒரு நாள் முன்பாகவே நானாக வருவேன் வந்தது.

திரையுலகினரால் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக படத்தின் ரிலீஸ் பார்க்கப்பட்டது.

படத்தின் முதல் நாள் 10 கோடி 12 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளது. இந்த படத்திற்கு கிடைத்த பத்திரிகை, ஊடக, ரசிகர்கள் பாராட்டுகளுடன் வெற்றிநடை போடுகிறது.

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு நேரில் சென்று இயக்குனர் செல்வராகவனைச் சந்தித்து மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.

Comments (0)
Add Comment