நடிகைகளின் பின்னணிக் குரலாக ஒலிக்கும் ரவீனா ரவி!

திரைத்துறையில் பல முன்னணி கதாநாயகிகளுக்கு பின்னணிக் குரல் கலைஞராக பத்து ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார் ரவீனா ரவி. தனக்கு பக்கபலமாக இருந்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “என் அம்மாவே என் குரு. அம்மா ஸ்ரீஜா ரவி  இதுவரை 2 ஆயிரத்திற்கும் அதிகமான திரைப்படங்களில் பணிபுரிந்ததுடன், ஐந்து மாநில விருதுகள் பெற்று நாற்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக திரைத்துறையில் இருக்கிறார்.

என் உலகம் எல்லாமே என் பெற்றோர் ரவீந்திரநாதன் மற்றும் ஸ்ரீஜா ரவி அவர்கள்தான்.

இதுவரை 104 இயக்குநர்களிடம் நான் பணிபுரிந்திருக்கிறேன்.

அவர்கள் அத்தனை பேரும் ஒரு கலைஞராக என்னை மேம்படுத்திக்கொள்ள உதவியுள்ளனர்.

நான் பணியாற்றிய அனைத்து தயாரிப்பாளர்களுக்கும், ஒலிப்பதிவு தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் உள்ளம் கனிந்த நன்றிகள்.

இந்த நன்றி மடல் நான் குரல் கொடுத்த கதாநாயகிகளுக்கு நன்றி கூறாமல் நிறைவடையாது.

வெள்ளித்திரையில் அவர்கள் குரலாக ஒலிப்பதிவில் கிடைக்கும் ஆனந்தத்திற்கு அளவேயில்லை.

பின்னணி குரல் அளிப்பதில் ஆத்ம திருப்தி. என் மனதிற்கு நெருக்கமான இந்த தொழிலை தொடர்ந்து செய்ய உங்கள் ஆதரவே முக்கியமான காரணம்” என்று நெகிழ்ந்த மனநிலையில் நன்றி தெரிவித்துள்ளார்.

– பா. மகிழ்மதி

Comments (0)
Add Comment