நாக சைதன்யாவை இயக்கும் வெங்கட் பிரபு!

நடிகர் நாக சைதன்யா, இயக்குநர் வெங்கட்பிரபுவுடன் இணைந்திருக்கும் தன் ‘NC22’ படத்தின் படப்பிடிப்பை தொடங்கியிருக்கிறார்.

இந்தப் படம் நாகசைதன்யாவின் முதல் தமிழ்,தெலுங்கு மொழிகளில் உருவாகும் படமாக இருக்கும். அதேபோல, இயக்குநர் வெங்கட்பிரபுவுக்கும் இதுதான் முதல் தெலுங்கு படம். கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

இன்னொரு நல்ல செய்தி ‘மாஸ்ட்ரோ’ இளையராஜாவும், ‘லிட்டில் மாஸ்ட்ரோ’ யுவன்ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைக்கிறார்கள்.

இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து ஒரு படத்தின் ஆல்பத்தில் பணிபுரிவது இதுவே முதல்முறை. நடிகர் நாகசைதன்யா இதுவரை கதாநாயகனாக நடித்த படங்களிலேயே இதுதான் அதிக பட்ஜெட் கொண்ட படமாக இருக்கும்.

அழகான காட்சிகளை படமாக்குவதில் திறமையான ஒளிப்பதிவாளரான எஸ்.ஆர்.கதிர் இந்தப் படத்தில் இணைகிறார்.

படத்தின் வசனத்தை அபூரி ரவி எழுதுகிறார்.

முக்கிய சண்டைக் காட்சிகளை படமாக்குவதற்காக சர்வதேச ஆக்‌ஷன் இயக்குநரான யானிக் பென் இணைந்துள்ளார்.

படத்தின் தொழில்நுட்பக் குழு தொடர்பாக தற்போது வெளியாகியுள்ள விவரங்கள் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்னும் மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும்.

Comments (0)
Add Comment