ஆஸி.க்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது.

மொகாலியில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி-20 போட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்றது.

கனமழை காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் போட்டி நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது.

இறுதியாக 8 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 8 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்தது.

கேப்டன் ஆரன் பிஞ்ச் 31 ரன்கள் எடுத்தார். அதிகபட்சமாக மேத்யூ வாட் 43 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். இந்தியா தரப்பில் அக்சர் படேல் 2 விக்கெட்களையும், பும்ரா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பின்னர் 91 ரன்கள் என்ற இலக்கை நோக்கிக் களமிறங்கிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் 10 ரன்களுடன் வெளியேறினார். சிறப்பாக விளைடியாக கேப்டன் ரோகித் சர்மா 46 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.

விராட் கோலி 11 ரன்களும், பாண்ட்யா 9 ரன்களும் எடுத்தனர். தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 10 ரன்கள் எடுத்தார்.

இதனால் 7.2 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 92 ரன்கள் குவித்த இந்திய அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது.

Comments (0)
Add Comment