கதிர் நடித்துள்ள ‘ஆசை’ படத்தின் முதல் பார்வை!

ஜீரோ படப்புகழ் இயக்குநர் ஷிவ் மோஹா இயக்கத்தில் கதிர்- திவ்யபாரதி நடித்துள்ள ‘ஆசை’ படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.

படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் ரமேஷ் பிள்ளை, “இதுபோன்ற இளமை ததும்பும் அணியுடன் வேலை பார்ப்பது எனக்கு மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. அதுதான் இவ்வளவு குறுகிய காலத்தில் படத்தை முடிக்க உதவியது.

இந்தப் படத்தில் தொழில்நுட்ப குழுவில் பெரும்பாலானோர் என் கல்லூரிகால நண்பர்கள் மற்றும் ‘ஜீரோ’ படத்தில் பணியாற்றியவர்கள் என்பதால் எங்களுக்குள் நல்ல ஒரு புரிதல் இருந்தது.

‘சுழல்’ படத்தின் மூலம் தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தைக் கதிர் கொண்டுள்ளார். திவ்யபாரதியும் குறைந்த காலத்தில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். படத்தில் அவரது நடிப்பும் முக்கியமான ஒரு அங்கம்.

இயக்குநர் ஷிவ் மோஹா தன் திரைக்கதையை படமாக்குவதில் திறமையான ஒருவர். தற்போது போஸ்ட் புரொடக்சன் வேலைகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் படத்தின் ஆடியோ, டிரைலர் மற்றும் படம் வெளியாகும் தேதி ஆகியவை பற்றி அறிவிப்பு வெளியாகும்” என்றார்.

மலையாளத்தில் விமர்சனரீதியாகவும், வசூல்ரீதியாகவும் வெற்றிபெற்ற ‘இஷ்க்’ படத்தின் தழுவல்தான் ‘ஆசை’ திரைப்படம்.

Comments (0)
Add Comment