காமெடி நடிகர் போண்டாமணிக்கு அரசு உதவி!

சென்னையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார் நகைச்சுவை நடிகர் போண்டா மணி. பல படங்களில் நடித்து மக்களிடையே பிரபலமாக இருந்துவரும் அவருக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதையறிந்த நகைச்சுவை நடிகர் பெஞ்சமின், போண்டா மணியின் உடல்நிலை பற்றி உருக்கத்துடன் தெரிவித்து, நண்பரைக் காப்பாற்றுங்கள் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அந்த காணொளி மிகப் பரவலாக ஊடகங்களில் பகிரப்பட்டது.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் போண்டாமணியை சந்தித்து நலம் விசாரித்தார்.

அப்போது அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தவர், அதற்கான முழு செலவையும் முதல்வர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ஏற்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

– பா. மகிழ்மதி

Comments (0)
Add Comment