மாமன்னன் படத்தில் எனக்கு குணச்சித்திர வேடம்!

– நடிகர் வடிவேலு பேச்சு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நகைச்சுவை நடிகர் வைகைப் புயல் வடிவேலு சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அப்போது அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனிடையே தரிசனத்திற்கு பின்னர் தான் நடித்துவரும் படங்கள் குறித்து விளக்கமளித்தார்.

அப்போது பேசிய அவர், “நான் நடித்து வெளி வர உள்ள படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கும். தற்போது நாய் சேகர் ரிட்டன், மாமன்னன், சந்திரமுகி 2 போன்ற படங்களில் நடித்து வருகிறேன்.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் நடித்துவரும் மாமன்னன் திரைப்படம் நன்றாக வந்துள்ளது. படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்துள்ளேன்.

என்னோடு தொடர்ந்து நடித்த துணை நடிகர்களுக்கான காமெடி டிராக் தற்போது இல்லாததால் முன்பு போல் அவர்களுடன் சேர்ந்து நடிக்க இயலவில்லை.

தற்போது தான் நடித்துள்ள திரைப்படங்களில் மக்கள் எதிர்பார்க்கும் காமெடிகள் இன்னும் அதிகமாகவே இருக்கும். தற்போது நடித்துள்ள நாய் சேகர் படத்தில் பாடல் பாடியுள்ளேன். அப்பாடல் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெறும்.

உடல் நலக்குறைவால் இருக்கும் நடிகர் போண்டா மணிக்கு தன்னால் இயன்ற உதவியை செய்வேன்” எனக் கூறினார்.

Comments (0)
Add Comment