படம் வெளியான 3 நாட்களுக்குப் பிறகே விமர்சனம் எழுத வேண்டும்!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2022ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.

சங்கத் தலைவர் என்.ராமசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில், துணைத்தலைவர்கள் எஸ்.கதிரேசன், ஆர்.கே.சுரேஷ், ராதாகிருஷ்ணன், பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், முன்னாள் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பல தயாரிப்பாளர்கள் பங்கேற்றனர்.

தமிழ்நாடு அரசின் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அனுப்பிய வாழ்த்துக் கடிதம் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது. பின்னர், இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திரையரங்குகளில் டிக்கெட்களை சென்டர்லைஸ் சர்வர் மூலம் மானிட்டரிங் செய்து டிக்கெட் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு Digital service provider (QUBE, UFO) நிறுவனங்கள் அதிகப்படியான தொகையை தயாரிப்பாளர்களிடமிருந்து வசூலிப்பதை கட்டுப்படுத்தி, பாதியாக குறைக்க வேண்டும்.

திரைப்படங்களின் விமர்சனங்களை படம் வெளியான தேதியிலிருந்து மூன்று நாட்கள் கழித்து எழுதவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Comments (0)
Add Comment