சினம் – த்ரில்லர் எமோஷனல் கதை!

இயக்குநர் குமரவேலன்

GNR குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் படம் ‘சினம்’.

பாடல்கள், பட புரோமோக்கள் என மக்கள் மத்தியில் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்போடு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் அருண் விஜய் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநர் குமரவேலன், “சினம் படம் உருவாக்கம் மற்றும் கதையில் நிறைய எமோஷன்கள் இருக்கும். இது கதைக்கும் மிக சரியாக பொருந்தி போகும்.

‘ஹரிதாஸ்’ படத்திற்கு பிறகு அருண் விஜய் என் வேலையைப் பாராட்டி, அடுத்து என்னுடன் பணிபுரிய விருப்பம் தெரிவித்தார்.

ஆனால், அதற்குள் அவர் மற்ற படங்களின் வேலைகளில் பிஸியாகிவிட்டார். நானும் ‘வாகா’ படத்திற்குள் போய்விட்டேன்.

இதெல்லாம் முடித்து விட்டு அடுத்து இருவரும் ‘சினம்’ படத்திற்காக ஒன்றிணைந்தோம். இந்த படம் எங்கள் குழுவில் எல்லாருக்கும் திருப்தி அளிக்கும்படி நன்றாக வந்திருக்கிறது”.

‘சினம்’ கதைக்கான ஆரம்பப்புள்ளி என்ன?

“வாகா படத்திற்கு பிறகு என்னுடைய பலம் என்ன என்பது தெரியாமல், ஒரு தெளிவற்ற நிலையிலேயே இருந்தேன்.

அந்த சமயத்தில் தான் என் தந்தை, என் முந்தைய படமான ‘ஹரிதாஸ்’ஸை குறிப்பிட்டு, அதில் இருக்கும் ‘எமோஷன்ஸ்’ தான் என்னுடைய ப்ளஸ் என்றார். அதில் இருந்துதான் ‘சினம்’ படத்தின் பயணம் ஆரம்பித்தது.

த்ரில்லர் மற்றும் எமோஷன்ஸ் என அனைத்தும் கலந்த மக்களுக்கு பிடித்த வகையிலான எண்டர்டெயினர் படமாக நிச்சயம் ‘சினம்’ இருக்கும்.

அனைத்து தரப்பு ரசிகர்களும் எதாவது ஒரு வகையில் இந்த படத்தை தங்களது வாழ்க்கையோடு கனெக்ட் செய்வார்கள்” என்றார்.

பா.மகிழ்மதி

Comments (0)
Add Comment