தமிழ்நாடு ஏன் தண்டம் கட்டி அழ வேண்டும்?

– மாநில சுயாட்சிக் குரல் கொடுத்த அண்ணா

“வட மாநிலங்களின் பல மாவட்டங்களில் பல தொழிற்சாலைகள் உருவாக்கப்படவில்லை என்றால், அதற்கு முழுக்காரணம் அந்த மாநிலங்களை ஆளும் அரசுகளின் ஒட்டுமொத்த கையாலாகாத் தனமும், அக்கறையற்ற போக்கும் தான்.

வட இந்திய மாநில அரசுகளின் ஒட்டுமொத்த கையாலாகாத் தனத்துக்கும் மிக மோசமான சீர்குலைவுக்கும் தமிழ்நாடு ஏன் தண்டம் கட்டி அழ வேண்டும்?

உண்மையில் தாங்கள் செய்யாத குற்றத்துக்காக நான்கு தென் மாநிலங்களும் ஏன் தண்டிக்கப்பட வேண்டும்” – என்று பேசியிருப்பவர் தமிழக முதல்வராக இருந்த அண்ணா.

Comments (0)
Add Comment