தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் 384 மருந்துகள்!

2022-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலை ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று வெளியிட்டார். இந்தப் பட்டியலில் மொத்தம் 384 மருந்துகள் இடம்பெற்றுள்ளன.

இதில் புதிதாக 34 மருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. புற்றுநோய்க்கான மருந்துகள் மற்றும் ஐவர்மெக்டின், முபுரோசின் போன்ற நோய்த் தொற்றை தடுக்கும் மருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் ரேனிடிடைன், சுக்ரால்பேட், எரித்ரோமைசின், ரேன்டாக், ஜென்டாக் உள்பட 26 மருந்துகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

மிகவும் விலை குறைந்த மாற்று மருந்துகள் கிடைப்பதால் இவை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Comments (0)
Add Comment