அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பாரதிராஜா!

சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள பாரதிராஜா மருத்துவமனையில் இயக்குநர் பாரதிராஜா அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் மேல் சிகிச்சைக்காக எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதுமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள பாரதிராஜாவுக்கு கூடுதல் சிகிச்சை அளிக்க குடும்பத்தினர் முடிவெடுத்தனர்.

டாக்டர் நடேசன், பாரதிராஜாவின் மனைவி, மகன், மகள், தம்பி, கவிஞர் வைரமுத்து ஆகியோரின் ஆலோசனையின் பேர் அவர் எம்.ஜி.எம் மருத்துவமனைையில் சேர்க்கப்பட்டார்.

மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ராஜகோபால் மேற்பார்வையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்கான ஏற்பாட்டினை பாரதிராஜாவின் நெருங்கிய நண்பர் ஏ.சி சண்முகம் செய்துவருகிறார் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Comments (0)
Add Comment