இப்படிப்பட்ட ரசிகர்களா எனக்கு?

நடிகர் விக்ரம் நெகிழ்ச்சி

திருச்சியில் நடைபெரும் கோப்ரா திரைப்பட முன்னோட்ட நிகழ்ச்சிக்கு விமானம் மூலம் சென்றார் நடிகர் விக்ரம்.

விமான நிலையத்தில் அவரைப் பார்க்க அதிக அளவில் ரசிகர்கள் திரண்டிருந்தார்கள். அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் கூட்டத்தைக் கலைக்க தடியடி நடத்தினார்கள்.

திருச்சி பயணம் பற்றி சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட விக்ரம், “கோப்ரா திரைப்பட முன்னோட்ட நிகழ்விற்கு திருச்சி வந்த என்னை, வார்த்தைகளால் விவரிக்க இயலா வண்ணம் அன்பு மழையில் நனையவைத்த என் ரசிகர்களுக்கு என்றும் அன்புக்கு உரித்தானவனாய் என் இதயம் கனிந்த நன்றிகள்.

அதே வேளையில், சில விரும்பத்தகாத சூழல் ஏற்பட்டதாக என் கவனத்திற்கு வந்துள்ளது. அத்தகைய நிகழ்விற்கும், அசௌகர்யத்திற்கும் என் வருத்தத்தைப் பதிவு செய்து கொள்கிறேன். ‘இங்கு இவரை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்’ என்று நெகிழ்வுடன் எழுதியுள்ளார்.

Comments (0)
Add Comment