ரசனைக்கு மதமில்லை…!

சமீபத்திய நெகிழ்ச்சி!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள வளஞ்சேரியில், ‘ராமாயண விநாடி வினா போட்டி’ நடந்தது.

அதில் வென்ற ஐந்து பேரில், முகமது ஜாஃபர், முகம்மது பஷித் என்ற இருவர் இஸ்லாமிய மாணவர்கள்.

ஆயிரம் பேருக்கு மேல் கலந்துகொண்ட இந்தப் போட்டியில், இவர்கள் வென்றிருப்பது குறித்துப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

போட்டியில் வென்ற ஜாஃபர், தான் படிக்கும் இஸ்லாமியப் பள்ளி சிலபஸில் அனைத்து மத நூல்களும் உள்ளன என்று கூறியிருக்கிறார்.

அரசியலைத் தாண்டி அன்பு செய்வோம்!

– நன்றி : ஜுனியர் விகடன்

Comments (0)
Add Comment