மதுரைக்கு வந்தாலே மீசை தானா முறுக்கேறுகிறது!

சீயான் விக்ரம் பேச்சு!

‘சீயான்’ விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘கோப்ரா’. சயின்ஸ் பிக்சன் கதையில் பிரமாண்டமான படைப்பாக உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 31 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்தின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ரசிகர்களை சந்தித்தனர்.

கோலாகலமாக நடந்த விழாவில் பேசிய நடிகை மீனாட்சி, “இப்படத்தில் நான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். படத்தின் புரமோசனை இன்றுதான் துவங்கினோம். மதுரையில் உங்களுடன் அதை துவங்கியது மிகுந்த மகிழ்ச்சி” என்றார்.

நடிகை மிருணாளினி, “மதுரைக்கு வந்தது மிகுந்த சந்தோசம் அளிக்கிறது. நீங்கள் தரும் அன்பு பிரமிக்கவைக்கிறது.

கோப்ரா படத்தில் எல்லோரும் கடுமையாக உழைத்துள்ளோம். இந்தப்படம் நன்றாக வந்துள்ளது எல்லோரும் தியேட்டரில் போய் படம் பாருங்கள்” என்றார்.

நடிகர் விக்ரம் பேசும்போது, “மதுரை வந்தாலே மீசை தானாகவே முறுக்குகிறது. அதற்கு உங்கள் அன்பு தான் காரணம். இந்த கல்லூரியில் தான் என் தந்தை படித்தார்.

மதுரையில தான் நான் ஹாலிடே கொண்டாடுவேன். என் நண்பர்கள் பாலா, அமீர் எல்லாம் இங்குதான் இருந்துள்ளார்கள்.

அமீர் மதுரையில் இருந்து ஸ்பெஷலாக உணவுகள் கொண்டு வருவார். கோப்ரா படத்தைப் பொறுத்தவரை நிறைய புதுமைகள் இதில் இருக்கிறது.

எமோஷன், காமெடி, ஆக்சன் எல்லாம் கலந்து இருக்கும். எனக்குப் படம் மிகவும் பிடித்துள்ளது. உங்களுக்கும் பிடிக்கும்” என்று உற்சாகமாகப் பேசினார்.

படத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Comments (0)
Add Comment