ஜெயம் ரவியின் 30வது படம்: படப்பிடிப்பு தொடக்கம்!

சென்னையில் ஜெயம் ரவி நடிக்கும் 30வது படத்தின் பூஜை நடைபெற்றது. இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.

நட்டி நட்ராஜ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். தற்போது படப்பிடிப்பு முதல் ஊட்டியில் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்கட்ட படப்பிடிப்பில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

அண்ணன், தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்ட கதை எனச் சொல்லப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் உணர்வுபூர்வமான ஒரு படத்தை காணலாம் என்கிறார்கள்.

தற்போது நடைபெற்றுவரும் முதல்கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் முதல் வாரத்தில் முடிவடையும்.

பிறகு ஊட்டியில் இருந்து திரும்பும் படக்குழுவினர் சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கின்றனர்.

எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகிவரும் இந்த படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனத்தினர் தயாரிக்கின்றனர்.

Comments (0)
Add Comment