ஆசிரியர்கள் பாதி பெற்றோர்களாக இருக்க வேண்டும்!

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தொப்பநாயக்கன்பட்டியில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மற்றும் சடையம்பட்டியில் அரசு உயர்நிலைப் பள்ளியின் புதிய கட்டிடத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

பின்னர் மாணவர்களிடையே பேசிய அவர், “மாணவர்களின் கவனம் முழுவதும் படிப்பதில் தான் இருக்க வேண்டும்.

ஆசிரியர்கள் பாதி பெற்றோர்களாக இருக்க வேண்டும், பெற்றோர்கள் பாதி ஆசிரியர்களாக இருக்க வேண்டும். ஆசிரியர்கள் உங்களை கண்டிப்பது நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான்” எனக் கூறினார்.

Comments (0)
Add Comment