ஆபத்தை உணராமல் அழகை ரசிக்கும் மக்கள்!

ஐஸ்லாந்து தலைநகரான ரேக்ஜவிக்கிளிலிருந்து 32கி.மீ. தொலைவில் உள்ளது பக்ராடால்ஸ்பியால் எரிமலை.

அந்தப் பகுதியில் கடந்த சில நாட்களாகவே சில அதிர்வு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த 3ம் தேதி எரிமலை வெடிக்கத் தொடங்கியது.

அடுத்தடுத்த நாட்களில் எரிமலையிலிருந்து புகையுடன் கூடிய லாவா குழம்பு வெளியேறி வருகிறது. எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ள பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் எரிமலை வெடித்துச் சிதறுவதை காண, அப்பகுதியில் ஏராளமான மக்கள் குவிந்து வருகின்றனர். அதேபோல விமான போக்குவரத்தும் தடையின்றி செயல்பட்டு வருகிறது.

எரிமலை வெடிப்பின் தொடக்க கட்டத்தில் அதன் பாதிப்புகளை முழுமையாக கூறமுடியாது என்றாலும் அதிலிருந்து விஷவாயு வெளியேறும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த ஆண்டு இதே எரிமலையில் ஏற்பட்ட வெடிப்பு சுமார் 6 மாதங்கள் வரை நீடித்தது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment