நாளை நடைபெறுகிறது குடியரசு துணைத் தலைவா் தேர்தல்!

குடியரசு துணைத் தலைவா் தோ்தல் நாளை நடைபெறவுள்ளது.

மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களிக்கும் இத்தோ்தலில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநா் மார்கரெட் ஆல்வா போட்டியிடுகிறார்.

இந்நிலையில், ட்விட்டரில் அவர் வெளியிட்ட காணொலிப் பதிவில், “குடியரசு துணைத் தலைவா் தோ்தல் ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடைபெறுவதாலும், கொறடா உத்தரவு கட்டுப்படுத்தாது என்பதாலும் எம்.பி.க்கள் அனைவரும் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும்.

அரசியல் அழுத்தத்துக்கு உள்படாமல் இப்பதவிக்கு பொருத்தமான வேட்பாளரை தோ்வு செய்ய வேண்டும். கட்சி வேறுபாடுகளைக் கடந்து, தனக்கு வாக்களிக்க வேண்டும்” என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Comments (0)
Add Comment