தென்மாவட்ட பின்னணிக் கதையில் நடிக்கும் விக்ராந்த்!

தொட்டுவிடும் தூரம் என்கிற படத்தை இயக்கிய இயக்குநர் வி.பி நாகேஸ்வரன் என்பவர் இயக்கும் புதிய படத்தில் விக்ராந்த் நாயகனாக நடிக்கிறார்.

இன்னொரு கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ஒருவர் நடிக்கவுள்ளார். அவருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

டிக்கிலோனா புகழ் ஷிரின் கஞ்ச்வாலா கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும் ஜெய் பீம் தமிழ், வேல ராமமூர்த்தி, மதுசூதனன், மாரிமுத்து, ரமா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

தென் மாவட்டங்களின் வாழ்வியல் சார்ந்து சமூக அக்கறை, ஆக்சன் கலந்த குடும்பப் பாங்கான கதையம்சத்துடன் படம் உருவாகிறது.

யுகபாரதி பாடல்களை எழுதுகிறார்.

சென்னையில் தொடங்கும் படப்பிடிப்பு தேனியில் தொடர்ந்து நடைபெறவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

Comments (0)
Add Comment