கதைக்குள் ஒரு திரைக்கதை: இதுதான் ஸ்கிரீன்பிளே படம்!

த்ரில்லிங்கான ஒரு படத்தை தயாரித்து இயக்கியுள்ளார் அமர்பாபு. படத்தின் பெயர் ஸ்கிரீன்பிளே. படத்தின் தலைப்பே புதுமையாக இருக்கிறது.

அப்படியென்ன கதை சொல்லப் போகிறார்கள் என்று கேட்டால், கதைக்குள் ஒரு திரைக்கதையை முடிந்து வைத்திருக்கிறார்கள்.

தான் காதலிக்கும் பெண்ணுக்காக இளம் திரைப்பட இயக்குநர் சூர்யா, தயாரிப்பாளரான பெண்ணோட அப்பாவை கவர ஒரு கதை சொல்கிறார்.

அக்கதை தன்னோட வாழ்க்கையை மட்டுமல்ல தன்னைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையை எப்படி சிக்கலுக்கு உள்ளாக்குகிறது என்பதே படத்தின் கதை.

“கதையைவிட திரைக்கதை பார்வையாளர்கள் யூகிக்கமுடியாத வகையில் இருக்கும்” என்கிறார் இயக்குநர் அமர்பாபு.

படத்தில் அசோக்குமார், அப்பாஸ், முரளி சர்மா, தனுராய், அஜய் ரத்னம் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர்.

Comments (0)
Add Comment