செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சாதித்த தமிழர்கள்!

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர்.

ஆண்கள் பிரிவில் 188 அணிகளும், பெண்கள் பிரிவில் 162 அணிகளும் கலந்து கொண்டுள்ளன. ஏற்கனவே, 4 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், நேற்று 5வது சுற்றுக்கான போட்டி நடைபெற்றது.

இதில், ஓபன் பிரிவில் இந்திய பி பிரிவில் அணியில் தமிழக வீரர்கள் அதிபன், குகேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

தமிழக வீரர் குகேஷ் 44வது நகர்த்தலில் ஸ்பெயின் அணியை சார்ந்த ஷிரோவ் அலெக்சியை வென்றார்.

மற்றொரு தமிழக வீரர் அதிபன் தனது 47வது நகர்த்தலில் ஸ்பெயின் அணியின் பொனோலி எடுராடோவை வென்றார்.

மற்றொரு போட்டியில் இந்திய மகளிர் அணி சி பிரிவில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றிப் பெற்றார்.

பிரேசில் வீராங்கனையை எதிர்கொண்டபோது 32வது நகர்த்தலில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றிப் பெற்றார்.

Comments (0)
Add Comment